Pages

ஞாயிறு, 22 ஜூன், 2014

பெண்ணியம் இலக்கியம் ஆணாதிக்கம்

பெண்ணியம் இலக்கியம் ஆணாதிக்கம் 

இரு வார இலக்கிய பெண்ணிய ஜெமோ கருத்தது போராட்டங்கள் விறுவிறுப்பாக இருந்தது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றாக நான் நினைப்பது, உலகம் முழுதும் இருக்கும் ஆண் அதிக்க மனோபாவம். உலகம் முழுக்க சுற்றி வந்தவன் எனும் முறையில், உங்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்று உள்ளது. 
எங்கெல்லாம் ஆழ்ந்த மத நம்பிக்கைகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் பெண்களின் நிலை ஆண்களைவிட தாழ்ந்துதான் இருக்கிறது. இதில் இந்து, கிருத்தவ, இஸ்லாமிய, பௌத்த இன்னும் இருக்கும் அத்தனை மதங்களும் அடக்கம். 
மதத்தை தூக்கி எறிந்த சைனாவில் பெண்களின் முன்னேற்றம் அபரிமிதமாக இருக்கிறது. ஆயினும் அங்கும் எந்த பிரதேசங்களில் மதம் தனது நாக்கை நீட்டி வைத்திருக்கிறதோ அந்த இடங்களில் பெண்கள் அடங்கி இருக்கிறார்கள். இதை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். அந்த குடும்பங்களில் என புரிந்துகொள்வது தவறு. அந்த பிரதேசத்தில். 
பெண்களின் உடை ஒருவனை காமம் கொள்ள செய்யும்.. சரிதான் அவன் அது மாதிரி அவன் தாயும் தமக்கையும் உடுத்தி பார்த்திராமல் இருந்தால், அவன் அருகிலிருக்கும்  அனைவரும் அப்படி உடை உடுத்தி இருந்தால். 
சவூதி இளைஞர்கள் இத்தாலி கடற்கரையில் இந்த கோடியில் இருந்து அந்த கோடிக்கு ஓடினார்கள்... பெண்களை இரு துண்டு உடையில் பார்க்க. இங்கு பதின்ம வயது குழந்தைகள் (அமெரிக்காவில்) உடை பற்றியோ பெண் ஆண் பேதம் பற்றியோ கவலையின்றி திரிகிறார்கள். 
தாய்லாந்து சென்ற ஒரு பெரிய புக்கர் பரிசு "குறி" வைத்து எழுதும் எழுத்தாளர் அங்கு பெண்களின் உடை குறித்து புலம்பினார். வெங்காயம் - வெற்று சதை. 
இந்த மதத்தை மட்டும் தூக்கி எறிந்தால், மனசாட்சிக்கு மட்டும் கட்டு பட்டால் ... மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்தலாம்.






  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக