Pages

ஞாயிறு, 22 ஜூன், 2014

பெண்ணியம் இலக்கியம் ஆணாதிக்கம்

பெண்ணியம் இலக்கியம் ஆணாதிக்கம் 

இரு வார இலக்கிய பெண்ணிய ஜெமோ கருத்தது போராட்டங்கள் விறுவிறுப்பாக இருந்தது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றாக நான் நினைப்பது, உலகம் முழுதும் இருக்கும் ஆண் அதிக்க மனோபாவம். உலகம் முழுக்க சுற்றி வந்தவன் எனும் முறையில், உங்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்று உள்ளது. 
எங்கெல்லாம் ஆழ்ந்த மத நம்பிக்கைகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் பெண்களின் நிலை ஆண்களைவிட தாழ்ந்துதான் இருக்கிறது. இதில் இந்து, கிருத்தவ, இஸ்லாமிய, பௌத்த இன்னும் இருக்கும் அத்தனை மதங்களும் அடக்கம். 
மதத்தை தூக்கி எறிந்த சைனாவில் பெண்களின் முன்னேற்றம் அபரிமிதமாக இருக்கிறது. ஆயினும் அங்கும் எந்த பிரதேசங்களில் மதம் தனது நாக்கை நீட்டி வைத்திருக்கிறதோ அந்த இடங்களில் பெண்கள் அடங்கி இருக்கிறார்கள். இதை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். அந்த குடும்பங்களில் என புரிந்துகொள்வது தவறு. அந்த பிரதேசத்தில். 
பெண்களின் உடை ஒருவனை காமம் கொள்ள செய்யும்.. சரிதான் அவன் அது மாதிரி அவன் தாயும் தமக்கையும் உடுத்தி பார்த்திராமல் இருந்தால், அவன் அருகிலிருக்கும்  அனைவரும் அப்படி உடை உடுத்தி இருந்தால். 
சவூதி இளைஞர்கள் இத்தாலி கடற்கரையில் இந்த கோடியில் இருந்து அந்த கோடிக்கு ஓடினார்கள்... பெண்களை இரு துண்டு உடையில் பார்க்க. இங்கு பதின்ம வயது குழந்தைகள் (அமெரிக்காவில்) உடை பற்றியோ பெண் ஆண் பேதம் பற்றியோ கவலையின்றி திரிகிறார்கள். 
தாய்லாந்து சென்ற ஒரு பெரிய புக்கர் பரிசு "குறி" வைத்து எழுதும் எழுத்தாளர் அங்கு பெண்களின் உடை குறித்து புலம்பினார். வெங்காயம் - வெற்று சதை. 
இந்த மதத்தை மட்டும் தூக்கி எறிந்தால், மனசாட்சிக்கு மட்டும் கட்டு பட்டால் ... மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்தலாம்.






  



ஞாயிறு, 15 ஜூன், 2014

அன்புடன் ஒரு அப்பா!

அப்பாவிற்கான நாள்!
1990க்கு பிறகு பிறந்தவர்களை டிஜிடல் உலக குழந்தைகள், Digital Natives (DN) என்கிறார்கள். 80களில் அல்லது அதற்கு முன் பிறந்தவர்களை Digital Immigrants (DI)- டிஜிடல் உலக குடியேறிகள் என்கிறார்கள். அப்படியானால் இந்த DI களீன் பெற்றோர்? தொழிற்புரட்சியின் ஆரம்ப கால கட்டத்தில் இருந்த அவர்களுடன் வறுமையும் குடியிருந்தது. ஆனாலும் சமூகத்தின் ஒரளவு மேம்பட்ட அந்தஸ்தில் இருந்ததால், அவர்களின் பிள்ளைகளை இந்த டிஜிடல் உலகத்திற்குள், குடியேற்ற முடிந்தது. உண்மையில், தமிழகத்தில் 70 சதத்திற்கும் மேலான மக்கள், இன்னும் அதே 60 70 80 களின் தரத்தில்தான் வாழ்க்கையை உருட்டுகிறார்கள். பிரபஞ்சன் முதல் எத்தனையோ அறிவு ஜீவிகள், குடும்ப அமைப்பிற்கு எதிராக கொடி பிடித்திருந்தாலும், குடும்ப அமைப்பில், தந்தையாக இருப்பதும், மகனாக இருந்ததும் எத்தனை சுகமான அனுபவம். மேலை நாட்டில் உருவாக்கப்பட்ட தந்தையர் தினம் தாயார் தினம் போன்றவற்றின் தேவை இப்போது, இந்தியாவிற்கும் தேவைப்படுவது வருத்தமான விஷயம். அதுவும், இந்த DN வகையறாக்கள் அதிகமாக, இந்தகு நாட்களின் அவசியமும் அதிகமாகிறது. முதலில் பரிசாக வாங்கிய வெப்ஸ்டர்ஸ் டிக்ஷ்னரியை எத்தனை முறை என் அப்பா தடவிப்பார்த்துக்கொண்டிருந்தார்!
என் தலை முறைக்கு பெற்றோராக இருந்தது அவர்களுக்கும் என்னைப்போலவே சிரமமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
என் குழந்தைகளை வளர்க்க வழிகாட்ட, நான் படும் வாதைகள், அவர்களும் பட்டிருப்பார்கள்தானே. இந்த கால குழந்தைகள் விவரம் அறிந்தவர்களாக வளர்க்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதனால் எனது வாதை குறைவு என்றே நினைக்கிறேன். 
தந்தையால் காயம் பட்ட மகன்களும், மகன்களால் காயம்பட்ட தந்தைகளும் ஏராளம் இருக்கலாம். முன்னவர்கள், தாங்கள் தந்தையாகும் போதும், பின்னவர்கள் தாத்தாவாகும் போதும், அந்த காயங்கள் ஆறும். சிலருக்கு தழும்புகள் மிஞ்சலாம். 
தந்தை என் நினைவுகளுடன் வாழ, இன்னும் தந்தை எனும் பொறுப்பில் போகவேண்டிய தூரம் நிறைய இருப்பதாக படுகிறது.
அப்பாக்களுக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன் ஒரு அப்பா!