Pages

சனி, 12 டிசம்பர், 2015

சாதிக்கு வந்த சோதனை வெள்ளம்



சாதிக்கு வந்த சோதனை வெள்ளம் - தீர்த்து வைத்தால் ஒரு பரிசு உங்களுக்கு.


இவனுங்களுக்கு சில பாடங்கள் சொல்லித்தர வேண்டிய நேரம் வந்திருக்குன்னு நினைச்ச தேவதை ஒரு பெருமழையை அனுப்பியது. மாட்டிய மனிதர்களின், நிறங்கள் வெளிப்பட தொடங்க்கியது. சாதி மதங்களை தாண்டி மனித நேயம் பல இடங்களில் வெளிப்பட்டாலும், சாதி வெறி தலை காட்டிக்கொண்டே இருந்தது. அப்போதுதான் அது நடந்தது. தேவதை அனுப்பிய வெளிக்கிரக வாசிகளின் மிகப்பெரிய விண்கலம், தமிழகத்தில் இறங்கியது. அவர்களின் குரல் ரேடியோ டிவி இல்லாமல் அனைவருக்கும் கேட்டது.
"ஏ சாதி வெறியர்களே! உங்களின் வெறி பிடித்த பத்து சாதியில் இருந்தும் ஒவ்வொருவரை இங்கு வரிசையாக நிருத்தி இருக்கிறோம். உங்களுக்கு 5 நிமிடம் அவகாசம் தருகிறோம். எப்படி பிழைத்துக்கொள்வது என்னும் யுக்தியை வகுத்துக்கொள்ள. பத்து பேரையும் இந்த படத்தில் உள்ளது போல் நிறுத்துவோம். ஒவ்வொருவருக்கும் கருப்பு அல்லது வெள்ளை நிற கோமாளி தொப்பியை பொருத்துவோம். அது எந்த ஒரு ஒழுங்கு வரிசைக்கிரமுமாக (Order) அது இருக்காது. உதாரணமாக -
இப்படி இருக்கலாம்
கருப்பு கருப்பு வெள்ளை வெள்ளை வெள்ளை வெள்ளை கருப்பு வெள்ளை..
கருப்பு கருப்பு
இல்லை இப்படி
கருப்பு கருப்புகருப்பு கருப்புகருப்பு கருப்புகருப்பு கருப்புவெள்ளை வெள்ளை
இல்லை இப்படி
வெள்ளை வெள்ளைவெள்ளை வெள்ளைவெள்ளை வெள்ளைவெள்ளை வெள்ளைவெள்ளை வெள்ளை
எப்படி வேண்டுமானாலும் அணிவிப்போம்.
பத்தாவது ஆள் அடுத்து இருக்கும் ஒன்பது பேரின் கோமாளி தொப்பி நிறத்தை பார்க்கலாம்.
ஒன்பதாவது ஆள் அவன் எதிரில் இருக்கும் எட்டு கோமாளி தொப்பி நிறத்தை பார்க்கலாம்.
எட்டவது ஆள் அவன் எதிரில் இருக்கும் ஏழு கோமாளி தொப்பி நிறத்தை பார்க்கலாம்.
இப்படி....
பத்தாவது ஆள் அவன் சொந்த தலையில் இருக்கும் கோமாளி தொப்பி நிறத்தை சொல்ல வேண்டும். நிறத்தை மட்டும் ஒரே ஒரு வார்த்தையில் - "கருப்பு" அல்லது "வெள்ளை"  என்று மட்டுமே சொல்ல வேண்டும். மற்றவர்கள் எல்லோருக்கும் அது கேட்கும். பத்தாவது ஆளை மட்டும், தவறாக இருந்தாலும் உடனே கொல்ல மாட்டோம். அனால் அவனை அடுத்து ஒன்பதாவது ஆள் தவறான நிறத்தை சொன்னால் உடனே அவனை கொல்வோம். அதே கதிதான் மற்ற அனைவருக்கும். 
பத்தில் ஒன்பது பேர் சரியாக சொல்லிவிட்டால், உங்கள் சாதிகள் அனைத்தையும் விட்டு விடுவோம். இல்லை எனில் இந்த பத்து சாதி மக்களும் கூண்டோடு அழிக்கப் படுவீர்கள்.
இந்த பத்து பேருக்கும் அவர்கள் உத்தியை வகுத்துக்கொள்ள கொடுக்கப்படும் 5 நிமிடம் இப்போது தொடங்குகிறது.......




உங்களால் இந்த பத்து சாதி மக்களை காப்பாற்ற முடியுமா?
விடை - நாளைக்கு