Pages

ஞாயிறு, 21 ஜூலை, 2013

கேட்டிருக்கீங்களா?

கேட்டிருக்கீங்களா?
(உயர்திரு சுகி/உயர்திரு தென்கச்சி அவர்களின் உரையிலிருந்து).

சிவப்பழகு சாதனங்கள் குறித்த விளம்பரங்கள் எப்போதும் என்னை எரிச்சல் அடைய வைத்திருக்கின்றன. ஒரு மாநாட்டில்  ஒரு வெள்ளைக்காரர் பேசினாராம். நாங்கள் ஐரோப்பா முழுதும் ஒரே நிறத்தில் இருக்கிறோம். வெண்மையாக ஆளப்பிறந்தவர்கள் அதனால்தான் ஒரே நிறம், நீங்கள் கலப்பினம் அதனால் பல்வேறு நிறங்களில் இருக்கிறீர்கள், அதனால் அடிமைகளாக - என்றாராம். அந்த கூட்டத்தில் இருந்த மறைந்த நம் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பதில், "கழுதைகள் உலகெங்கும் ஒரே நிறம்தான். ஆனால் குதிரைகள் பல வண்ணம். நிறத்தினால் உயர்வு தாழ்வு பார்ப்பவர்கள் இதை நினைத்துக்கொள்வது நல்லது".
காக்கையை கிளி ஒன்று, கறுப்பு என கிண்டல் அடித்துக்கொண்டிருந்ததாம் கர்வமாக. அப்போது வந்த வேடன், கிளியை பிடித்துபோக - காக்கை கருப்பின் மேன்மை இதுதான் - உன் கலரில் வினையும் இருக்கிறது என்றதாம். பிடித்து சென்ற வேடனை காக்கையும் தொடர்ந்து சென்றதாம். அவன் கிளியை பேச பழக்கிகொண்டிருந்தானாம். கிளியை எப்படி பழக்குவார்கள் தெரியுமா? பூண்டை சுட்டு அதன் வாயில் வைப்பார்கள். அன்று அமாவாசையாம். வேடனின் மனைவி, கடவுளுக்கு படைத்து, "கா கா" என காகத்தை அழைத்தாளாம், சோறிட. அப்போது அந்த காகம் கிளியை பார்த்து சொன்னதாம். கலரா இருக்க உனக்கு அவன் பாஷையை கத்துகுடுக்க சூடு வைக்கிறான். கருப்பா இருக்க என் பாஷையில் என்னை கூப்பிடுகிறார்கள் பார்". வித்தியாசமான சிந்தனையாயிருந்தது. அதுசரி, வெள்ளை பணத்தைவிட கருப்பு பணம்தானே அதிகம். I thought of the other thing heard in US. A black person saying to the white, "When it is all winter, you are pale. When you go in the sun you get a tan. When it is really hot you turn red. But you call us colored. What a pity?" இதை கேட்டபோது, இந்த வண்ணப்பிரச்சினைக்கும், வர்ணப்பிரச்சினைக்கும் அதிக வித்தியாசம் இல்லை எனத்தோன்றியது. வர்ணத்தை அடுத்து இப்போது மதம் பிடிக்க தொடங்கியிருக்கிறது ஒரு கொலையில் ஆரம்பித்து. தமிழகத்தை நிம்மதியாக விடமாட்டர்கள் போலிருக்கிறது.

தென்கச்சியார் சொன்னது. ஆச்சாரியாரிடம் பாடம் கேட்பது முடிந்தபின் அவர் ஒவ்வொருவரிடமும் அவர்கள் கற்றது குறித்து கேட்கிறார். அனைவரும் பல ஏடுகளில் எழுதியிருப்பதை படிக்க, தருமர் மட்டும் தான் கற்றுக்கொண்டது ஒரு விஷயம்தான் என்கிறார். கோபம் கொண்ட ஆச்சரியார் அவரை அறைகிறார். பின்னர் வர் ஏட்டை வாங்கி பார்க்கையில் அதி "நிதானம்தான்" தான் கற்றுக்கொண்டது என எழிதி இருப்பதை பார்த்து, அவரை அணைத்துக்கொண்டு நீ மாணாக்கன் இல்லை குரு என்கிறார். இப்போது அது - "நிதானம்" இல்லாமைதான் இம்மாச்சரியங்களுக்கு காரணம் என நினைக்கிறேன்.

வெள்ளி, 19 ஜூலை, 2013

வாலியின் நினைவுகள் வாழ்ந்துகொண்டிருக்கும்

வாலியின் நினைவுகள் வாழ்ந்துகொண்டிருக்கும். எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபன் படம் வெளியிடும் தருவாயில், வாலியுடன் பேசிக்கொண்டிருந்தாராம். வாலியின் ஒரு கிண்டல் பேச்சிற்கு - இப்படி பேசினால் டைட்டிலில் உங்கள் பெயர் இருக்காது என தமாஷாக சொன்னாராம் எம்.ஜி.ஆர். உடனே வாலி, "அப்படியா? "உலகம் சுற்றும் பன்" - என்று பெயர் வைத்தால் நறாக இருக்காதே", என்றாராம். வாலியின் நகைச்சுவை நான் ரசிக்கும் விஷயம். RIP.  

செவ்வாய், 16 ஜூலை, 2013

விஜய் தொலைக்காட்சி விவாதம் - ஆங்கில மோகம் - என்ன ஒரு பரிதாபம்.

விஜய் தொலைக்காட்சி விவாதம் - ஆங்கில மோகம் - என்ன ஒரு பரிதாபம்.

விஜய் தொலைக்காட்சி விவாதம் - ஆங்கில மோகம் - என்ன ஒரு பரிதாபம்.

ஆங்கிலத்தில் என் பிள்ளைகள் பேசுகிறார்கள் எனச்சொல்லும்போது அந்த பெற்றோர்களிடம் காணக்கிடைத்த பெருமிதமும், குழந்தைகளை தமிழில் பேசினால் வதைக்கும் பெற்றோரையும், பள்ளிகளையும் கண்டு / கேள்விப்பட்டபோது, இவர்கள் எத்தனை கீழ்த்தரமாக சிந்திக்கிறார்கள் என்று நிஜமாக வேதனைப்பட்டேன். உண்மையான அறிவுக்கும், திறமைக்கும்  ஆங்கிலம் பேசும் திறமைக்கும் என்ன சம்பந்தம்? எத்தனை பெரிய ஆளுமைகள் இருந்த நம் நாட்டில், இப்படி ஒரு படித்த வர்க்கமா? நான் படிக்கவில்லை என சொன்னவர்களை கூட மன்னிக்கலாம். என் தந்தையோடு உயர்தர உணவகங்களில், பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்களிடம், நான் ஆங்கிலத்தில் பேசவில்லையானால், என் அப்பா முறைப்பார் என சொன்னதே ஒரு சின்ன பெண். அப்போது கூட அந்த தகப்பன் முறைத்தார். அந்த அறிவிலியை நினைத்துதான் வேதனை.  
இரு நிகழ்ச்சிகள் - நமது நாட்டின் ஆளுமைகள் - அவர்கள் வாழ்வில் நடந்தவை ஞாபகம் வருகிறது.
சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், முதல்வராக இருக்க வேண்டுமென நேரு வற்புறுத்தி கேட்டுக்கொள்ளப்பட்டவர். ஒருமுறை அவருக்கு அவருடைய "Opinion" கேட்டு தில்லியில் இருந்து கடிதம் வந்ததாம். அவரும் பதில் எழுதினார். தனது உதவியாளரான அதிகாரியிடம் தந்தார். சிறிது நேரம் ஆனது. அந்த அதிகாரி வந்தார். கடிதத்தை நீட்டினார். அய்யா தங்கள் ஒப்பம் வேண்டும் என்றார்.ஓமந்தூரார் எதற்கு என்றார். இல்லை நீங்கள் எழுதிய கடிதத்தில் "Opinion", ஸ்பெல்லிங்க் தவறாக இருந்தது, அதனால் திரும்ப திருத்தி எழிதி இருக்கிறேன் என்றார். ஓமந்தூரார் கேட்டார், "அவர்கள் உன் ஒபினியன் கேட்டார்களா என் ஒபீனியன் கேட்டார்களா?" என்று.
அடுத்து அவர் சொன்னதுதான் உச்சபட்சமாக புரிந்துகொள்ள வேண்டிய விஷயம். "அவர்கள் எனக்கு என்ன தெரியாது என்றும் தெரிந்து கொள்ள் வேண்டும். நான் நானாக இருக்கவே வேண்டும். நான் அல்லாதது நானாக காட்டிக்கொள்ள கூடாது", என்றார். பொய்யான வெளிக்காட்டல் நன்மைகளைவிட தீமையே அதிகம் தரும்.
இரண்டாவது, மஹாத்மா காந்தி, ஒருவருக்கு கடிதம் எழுதி இருந்தார். அவர் படித்த (முட்டாள்!) ஆங்கில விற்பன்னர். கடிதத்தின் சாரத்தை புரிந்து கொள்ளாத அவர், அந்த கடிதத்தில் இருந்த இலக்கண மற்றும் வார்த்தை பிழைகளை அடிக்கோடிட்டு திருந்தி, காந்திக்கு திருப்பி அனுப்பினார். காந்தி என்ன செய்தார் தெரியுமா? "உங்களின் இலக்கண திறமை மெச்சுகிறேன். என்னிடம் உதவியாளராக வேலைக்கு சேர முடியுமா?" என்று கேட்டு பதில் எழுதினார். 
இவர்களின் ஆளுமையை உங்களின் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள். 
இவை எல்லாவற்றையும்விட கொடுமையான விஷயம், பிள்ளைகளின் கையெழுத்து சரியில்லை என மார்க் குறைக்கும் மட ஆசிரியர்கள். மக்களை  அடிமை குமாஸ்தா வேலைக்கு தயாரிக்க சொன்ன வெள்ளையனும் போய்விட்டான், கையில் எழுதி கோப்பில் கோர்த்துவைக்கும் வழமையும் காலாவதியாகிவிட்டது முண்டங்களா.