Pages

வியாழன், 29 டிசம்பர், 2011

காதலுக்கு காலமில்லை.

காதலுக்கு காலமில்லை.
நிவேதிதா தமிழ்
(நாளைய இயக்குனர்களுக்கு சமர்ப்பணம்.)
மதராஸின் பிரெசிடென்சி கல்லூரி. வர்த்தக ஒலிபரப்பில் பதினாறு வயதினிலே படத்தின்  செந்தூரப்பூவே ஒலித்துக்கொண்டிருந்தது, புத்தம் புது பாடல்கள் நிகழ்ச்சியில். காலை பத்துமணி பரபரப்பில் - பெல்பாட்டம் தேய அவன் வேகமாக கல்லூரிக்குள் நுழையும்போது அவள் வந்தாள். "உங்களோட பெல்ஸ்ல பின்னாடி பாட்டத்துல ஜிப் வச்சி தச்சிருக்கிறது புத்திசாலித்தனமா தெரியுது", என்றாள். அவளின் இரட்டை சடை அவளின் பேச்சுக்கு நடனம் ஆட,வலது பக்க ஒத்தை ரோஜா அவனை சிதைத்தது. "அது சரி.. இப்படி  தெனமும் வெள்ளை ரோஜாவும் வி கட் தாவணியுமா.. என்னை படுத்தறியே! நான் பெயிலானா உங்கப்பாதான் பீஸ் கட்டணும்.". என்றான். .
" பெயிலானியானா இருக்குடா மகனே..." என இடித்தாள்  .
அட்லாண்டாவின் ஹாலிடே இன் ஹோட்டல். லெதர் ஃபேர் மற்றும் கான்ஃபிரன்சுக்காக  வந்திருந்தார்
ஐம்பதின் ஆரம்பத்தில் இருந்த ஹரி.மதிய உணவை தட்டில் ஏந்தி திரும்பியவருக்கு அதிர்ச்சி. நீங்க ... என அவர் ஆரம்பிக்கும் முன்பே அவள் "நீங்களா?" - என்றாள்.   ஒரு படித்த மேல்தர வியாபார வர்க்க சூழ்நிலை.. ஆடம்பர ஹோட்டல்.. சுற்றிலும் கனவான்கள்  .. எப்படி இருவருக்கும் மறந்தது? அவரின் கையிலிருந்த உணவுத்தட்டும் குளிர்பான கோப்பையும் நழுவின. பாய்ந்து வந்த பணியாள் - தான் அதை பார்த்துக்கொள்வதாக சொன்னதற்கு வழக்கமான "நன்றி" கூட அவருக்கு வரவில்லை. நடந்தாரா பறந்தாரா .. அவள் அவரின் இறுக்கமான பிடியில் இருந்தாள். இருவரின் அழுகை.. சூழ்நிலையை .. இறுக்கமாக்க, தெரிந்தோ தெரியாமலோ, அங்கு இழைந்துகொண்டிருந்த மெல்லிசை திடீர் என அதிகமாகி, அவர்கள் சுய நினைவு திரும்பியதும் குறைந்தது.
உணவு தட்டுடன் அவர்கள் மேசையில் அமர்ந்தபின்னும், இருவருக்கும் பேச தோன்றவில்லை. கண்ணின் ஓரங்களில் அரும்பி வழிந்த வலிகளை துடைத்தபடி இருந்தனர். முதலில் நிதானத்திற்கு வந்து பேசியது மீராதான். "எப்படிடா இருக்கே?" என்றாள்.
"இருக்கேன் மீரா.. நீ?". என்றார் ஹரி. அப்போதுதான் அவளை நன்றாக பார்க்க அவரால் முடிந்தது. நீர்த்திரை கண்ணிலிருந்து கொஞ்சம் விலகியிருந்தது.
மீரா நிறைய மாறி  இருந்தாள். எப்போதும் பின்னலில் இருக்கும் தலைமுடி விரிந்து தோளில் புரண்டுகொண்டிருந்தது. ஒற்றை ரோஜாவெல்லாம் இல்லை.இந்திய  உடையின்  தாக்கம் கொஞ்சமும் இல்லாத கவுன்.. அதற்கு மேல் கோட். காலில் முழங்கால் வரை ஏறிய பூட்ஸ். பொட்டில்லாத நெற்றி. அதே திமிரான பார்வை. உதட்டின் ஓரத்தில் நிரந்தரமான புன்னகை. கன்னங்களில் சிவப்பை மீறி எட்டிப்பார்க்கும் முதுமையை மறைக்கும் மஸ்காரா. கூந்தலை வருடியபடி பேசும் பேச்சு வாகு முற்றிலும் புதிதாய் இருந்தது. வாணி ஜெயராமின் குரல்
மட்டும் அப்படியே இருந்தது, இன்னும் வயதாகாமல். உடலின் வளைவுகளில் கொஞ்சம் சிவப்பு கூடி   இருந்தது .. அளவுகளில் பெரிதாக மாற்றம் இல்லை.
"தொந்தி போட்டிருக்கேடா.." என்றாள் லேசாக சிரித்தபடி.
"நீ எப்படி இன்னும் அப்படியே இருக்கே? சொல்லப்போனா.. இப்போ முன்னிய விட அழகா இருக்கே." என்றான்.
"வயசாச்சில்ல.. கண்ணு கொஞ்சம் கெட்டுப்போயிருக்கும்.. பாத்துக்க.." என்றாள்.
  "ஆமாடா .. வயசு. சே அப்படியே இருந்திருந்தா! வாழ்க்கை எப்படி போயிட்டு இருக்கு உனக்கு."
"நீ சொல்லுடா. எத்தன பசங்க"
"சித்தார்த் ஜான்ஸ் ஹோப்கின்ஸ்ல ஐந்தாம் வருஷம்.. நிவேதிதா எம் ஐ டி மூன்றாம் வருடம்.. லக்ஷ்மி போஸ்டனில் ஒரு பள்ளியில் ஆசிரியை..."
"வாவ்.. நமக்குள்ள நிறைய ஒத்துமை இருக்குப்பா. என்னோட பொண்ணுதான் பெரியவ. ஹார்வேர்ட்ல ஃபைனல் மெடிக்கல் படிக்கிறா. பேர் தெரியுமா ஆச்சர்யம் .. நிவேதிதா. பையன் பேர் இதைவிட ஆச்சர்யம்.. கௌதம் அவனும் அங்கேயே நாலாம் வருடம் படிக்கிறான். கண்ணன்  சிக்காகோவில ஆசிரியர்."
"பொண்டாட்டி எப்படிடா?"
"ஜெம் .. இங்க வந்து MBA முடிச்ச உடனே எங்க அம்மா புடிச்ச ஸ்ரீரங்கத்து தேவதை. என்னாலதான் அவளோட நேரம் செலவழிக்க.. எப்படி சொல்றதனு தெரியல. தேடல் .. தினமும் புதிய அனுபவம் இந்த நிறுவனத்தில் சேல்ஸ் மேனஜராக சேர்ந்ததில் இருந்து. தினம் தினம் புதிய முகங்கள் சாதனைகள். 400 மில்லியன் இவர்களின் டர்ன் ஓவர் அப்போது இன்று 8.5 பில்லியனுக்கு உயர்த்தி இருக்கிறேன்.அதிலும் இன்னொரு உள் நோக்கம் இப்படி சுத்தினால் எங்காவது உன்னை சந்திக்க மாட்டோமா என்று."
அவனை இழுத்து முத்தமிட்டாள்.
"எப்படிடா இவ்வளவு ஒத்துமையாக நினைக்கிறோம். நான் கல்யாணமான பிறகு வீட்டில்தான் இருந்தேன். அவர் பள்ளி சென்று  திரும்பி வரும் வரை நரகம். ஓட்ட முடியாத கிராமம். முதல் திருமண நாளில் கொண்டாட முடியாமல் நிவி உதைத்தாள். மறுநாள் அவள் பிறக்கும்வரை வலி. ஆறு மாதம் ஓடியது. அதன்பின் மனதின் தீராத ஒலி ஒரு  வலி. நாம் இப்படியே ஒன்றும் சாதிக்காமல் போய்விடுவோமோ என்று. இந்த MNC கம்பெனியில் சேல்ஸ் எக்செகுடிவாக சேர்ந்தேன்.இந்த ஊருக்கு வந்தபோது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, என் விசாவை சார்ந்து வந்ததால். ஆண் மனோபாவம். எனது வருமானத்தில் வாழ பிடிக்காமல், சில காலம் ரொம்ப அமைதியாக இருந்தார், பேசவே மாட்டார். அவருக்கு வேலை கிடைத்தபின் - ஒரு நிம்மதி. அதுக்கு பின் சுற்றினேன் சாதித்தேன் உன்னை மாதிரியே. அரை பில்லியன் கம்பெனியை இன்று ஆறு பில்லியன் கம்பெனியாக மாற்றி இருக்கிறேன். நீ நினைத்தது போலவே உன்னை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்ற ..."
அவளின் கண்கள் பனிக்க வார்த்தை திக்கியது.
அவளை இழுத்து அணைக்க .. லேசான தூறல் .. வெள்ளை மழை. அவர்களின்
கான்ஃபிரன்ஸ் முழுதும் மறந்திருக்க.. அட்லாண்டாவின் வீதிகளில் நடந்துகொண்டிருந்திருந்தார்கள்.  அந்த வெள்ளை மழை அவர்களை வாழ்த்துவதாக தோன்றியது.
"ஃ பேஸ் புக், ஜிமெயில் எல்லாத்திலையும் தேடி இருக்கிறேன் தெரியுமா. ஆயிரம் ஹரி கிடைப்பார்கள்.. நீ மட்டும் கிடைக்கவே இல்லை."
"எனக்கு அது தோன்றவே இல்லை. உன்னோட வீட்டுக்காரர் எப்படி?"
"தங்கம்டா. கொஞ்சம் அம்மாஞ்சி. வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போக தவற மாட்டார். நாள் கிழமை பார்ப்பதில் ரொம்ப நம்பிக்கை. இதை எல்லாம்விட நிரம்ப ஆன்மீக ஈடுபாடு. எல்லா சாமியார்களையும் பிடிக்கும். நித்யா தப்பே செய்திருக்க வாய்ப்பில்லை என்பார்."
"என் மனைவியிடமும் அந்த குணம் உண்டு. அவளுக்கும் சாமியார்களை பிடிக்கும்."
"எனக்கு இப்ப ஒரு தெளிவு கிடைச்சிருக்கு ஹரி. நாம ரெண்டு பேருக்கும் ஒரே எண்ணங்கள். அதாவது ஒரு காந்தத்தின் ஒரே துருவங்கள் போல. அதனால்தான் நம்மால் சேர முடியவில்லை. எதிர் துருவங்களாக இருக்கும் அவர்களுடன் இணைந்திருக்கிறோம்"
"அப்படியா நினைக்கிறாய். அப்படியானால் அவர்கள் அருகிலேயே இருக்கும்படியான வேலை தேடி இருப்போமே. நான் என்ன எண்ணுகிறேன். எண்ணையும் தண்ணீரும் போல் அவர்களோடு ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்"
அவளின் கை அவன் கைகளை இன்பமாக இறுக்கியது. லேசாக தோளில் இடித்தாள்.
"உன்கிட்ட பேசி ஜெயிக்கறது..உம்.."
"திரும்பலாமா" என்றாள்.
ஹோட்டலுக்கு வந்தபோது  இரவு 10 மணி ஆகி இருந்தது.
"எனக்கு ஃபிளைட் நாளை மதியம் இரண்டு மணிக்கு. உனக்கு என்றாள்."
"எனக்கு மூன்று மணிக்கு. ஓ கே ..சாப்பிடலாமா.. இங்கு ஃ பிஷ்  அண்ட் சிப்ஸ் நல்லா இருக்கும்."
"எப்ப அதெல்லாம் சாப்பிட கத்துகிட்ட?"
"கிண்டலா?"
அவன் பார் செக்ஷனில் நுழைய அவள் விழிகள் விரிந்து புருவம் மேலேறியது.
"என்ன ...."
அவள் முடிக்கும் முன் பணியாள் வந்திருந்தாள்.
அவளின் சிரித்த முக விசாரிப்புகளுக்கு பதிலளித்து, "எனக்கு ப்ளாக் லேபில்.. டபுள் ஆண் தி ராக்ஸ்" என்றவன் "உனக்கு" என்றான் மீராவை பார்த்து. "ஸேம்.. ஹியர்" என்றாள்.
அவள் குடிப்பதை அவன் விமர்சிப்பான் என்று எதிர்பார்த்திருந்தாள். ஹரி அதை கண்டுகொள்ளவே இல்லை.
பக்கத்து டேபிளில் இருந்து எழுந்து போனவர்கள் விட்டு சென்றிருந்த உணவை பார்த்தான்.
"எத்தனை வீணாக்குகிறார்கள்.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா நேற்றுதான் கௌதம் சொன்னான். இந்த உலகில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் ஒரு வருடம் முழுக்க உணவளிக்க எவ்வளவு தேவை தெரியுமா?"
'என்ன ஒரு டிரில்லியன் டாலர்கள்?"
"ரொம்ப அதிகம். முப்பது மில்லியன் டாலர்கள்  போதும். என் கம்பெனியின் லாபத்தில் ஒரு சிறிய பங்கு..."
"நினைத்தால் சில சமயம்.. வெறுத்து விடுகிறது இல்லையா ஹரி.. நம் ஊரில் எத்தனை பட்டினி சாவுகள். நாம் பில்லியனில் புலம்பிக்கொண்டிருக்கிறோம்.. "
அவர்களின் பேச்சு அனைத்து தளங்களிலும் போனது.இரவு ஒரு மணிக்கு பாரை மூட வேண்டும் என பணியாள் சொன்னபோதுதான் அத்தனை நேரம் போனது அவர்களுக்கு தெரிந்தது.
எழுந்த போது ஹரி லேசாக தள்ளாடினான். மீரா கையை பிடித்து நடத்தினாள்.
பதினாலாவது மாடியில் லிஃப்ட் நின்றபோது, வாயேன் என் ரூமுக்கு இன்னும் கொஞ்ச நேரம் பேசலாம் என்றாள் மீரா.
இரு வினாடி தடுமாறிய ஹரி .. "ஓ கே" தோள் குலுக்கினான்.
அவள் அறைக்கு சென்றதும் கட்டிலில் விழுந்தான். "ஐந்தே நிமிடம்.. ஒரு குட்டி குளியல் போட்டுவிட்டு வந்துவிடுகிறேன்.." என்றவள்.. குளியல் அறைக்கு போனாள்.
அவள் திரும்பிபோது.. ஹரி நன்றாக துங்கி இருந்தான். அவனது ஷூவை கழற்றிவிட்டு டையை தளர்த்தினாள்.
பாவம் இரண்டு இரவாக தூங்கவில்லை என்றான் அல்லவா.. மறந்தேவிட்டேன். அவளுக்குள்  பேசிக்கொண்டாள்.
சோஃபாவில் படுத்து அவனை பார்த்துக்கொண்டிருந்தாள். எத்தனை இரவுகள்.. இதேபோல் சோஃபாவில் .. ஆனால் இவன் இல்லை அருகில்..
காலையில் "கண்ணா.. கண்ணா.." என செல்போனின் சிணுங்கலா அல்லது அந்த மெக்சிகன் காபியின் நறுமணமா.. தெரியவில்லை.. ஹரி கண் விழித்தான். பின்..  விழித்தான். இடம் புரிய கொஞ்சம் நேரமானது..
சிரித்தபடி காபியை நீட்டினாள் மீரா.
செல்போனை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு, காபியை வாங்கினான்.
"எழுந்தீட்டிங்களா?"
"எழுந்துட்டேன் லக்ஷ்மி.. என்ன பண்ணிண்டு இருக்கே."
"சனிக்கிழமை தானே. எழுந்து தம்பிக்கு போன் பண்ணினேன். ஆவடி சாமியார் இங்க வந்திருக்காராம்.."
"யார் அந்த புளியான்கொட்டை சாமியாரா?" என்றான்.
பெயரை கேட்டதும் மீரா புன்னகைத்தாள்.
"ஆமாங்க."
"போய் பாக்க போறியா?"
"இல்லைங்க.. போஸ்டன் வரல.. நீங்க இப்ப இருக்க அட்லாண்டாதான் வந்திருக்கார். உங்களுக்காக அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருக்கேன். உங்களுக்கு மூணு மணிக்குதானே ஃபிளைட். பத்து மணிக்கு போய் பாருங்கோ.."
"வேற வேலை இல்லியா எனக்கு."
"ப்ளீஸ் .. எனக்காக. அவர் ரெண்டு தாயத்து தருவார். பசங்களுக்காக சொல்லி இருக்கேன். வாங்கிட்டு வந்துடுங்க. அவர் எப்பேர் பட்ட மகான் தெரியுமா. காலத்தையே நிறுத்த தெரிந்த மகானுங்க."
"அப்படியா  ..சரி.." என்றான்.
"ஒழுங்கா சாப்பிடுங்க.. ராத்திரிக்கு நான் ஏர்போர்ட் வரணுமா.."
"வேண்டாம்.. நானே வந்து விடுகிறேன். வச்சிடட்டுமா.."
அவன் போனை வைத்ததும், மீராவின் போன் சிணுங்கியது.
"சொல்லுங்க.
எப்படி இருக்கீங்க.." என்றாள்.
"ஓ கே.. நீ  எப்படி இருக்க மீரா. அப்புறம் ஒரு விஷயம். இன்னிக்கி உனக்கு ரெண்டு மணிக்குதானே
ஃபிளைட். சென்னையில இருந்து ஒரு சாமியார் அட்லாண்டா வந்திருக்காராம்.ரங்க ராஜன் சொன்னான். அவர் கிட்ட உனக்காக ஒன்பதரை மணிக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருக்கோம். அவனோட பசங்களுக்கு ரெண்டு தாயத்து சொல்லி இருந்தானாம்.. நேத்து பேசறப்போ சொன்னான். எம்பசங்களுக்குன்னு நான் கேட்டதுதான் தாமதம்.. உடனே போன் பண்ணி சொல்லிட்டான். கொஞ்சம் போய் அவர பாத்து ஆசீர்வாதம் வாங்கிட்டு அந்த தாயத்துக்களையும் வாங்கி வந்துடுப்பா ப்ளீஸ். அவர் காலத்தையே நிறுத்த மாத்த  தெரிஞ்ச மகான்னு  ரங்கா சொல்லுராம்பா." 
ஹரி மையமாக சிரித்தான். மீராவும் அதில் கலந்து கொண்டாள்.
வழக்கம்மாக ஒவ்வொன்றுக்கும் விவாதம் செய்யும் மனைவி.. சிரித்துக்கொண்டே "சரிங்க.. அப்ப டைம் ஆயிடுச்சே.. சரி வச்சிடவா" ன்னு சொன்னது நிச்சயம் அவள் கணவனுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்.
"இதுல கூட எவ்வளவு ஒத்துமைடா நமக்கு.." என்றாள் மீரா ஹரியிடம்.
அவர்கள் ஹோட்டலை விட்டு வெளியில் வந்து டாக்ஸி பிடிக்கும்போது.. மணி 8 :30 ஆகி இருந்தது.
"மீரா நீ இந்த சாமியார்களை நம்பறியா?"
" நா கோவிலுக்கு கூட போக மாட்டேன். சாமியாரா..
சான்சே இல்லப்பா."
"இன்னிக்கு 
நாம ஒரு வேலை பண்ணலாமா..நம்ம பழைய கதைய சொல்லலாம் இவர்கிட்ட...  அவர்தான் காலத்தையே நிறுத்த மாத்த தெரிஞ்ச மகானாம் இல்ல. நம்ம வாழ்க்கைய மாத்த சொல்லலாம்.." அவன் பதின்ம வயது இளைஞனாக மாறி இருந்தான்..அந்த துள்ளலில். அவளும்தான்.
மீரா சிரித்தாள்."நான் ரெடி.." என்றாள்.
அந்த கோவிலின் விசாலமான மண்டபத்தில், பெரிய சிம்மாசனம் போன்ற சேரில் புளியாங்கோட்டை சாமியார் அமர்ந்திருந்தார். அவர்  சிஷ்யகோடிகள் அவர் பேசுவது கேட்காத தொலைவில் நின்றிருந்தார்கள்.
ஆசி வாங்க சிலர் காத்திருந்தார்கள்.
இவர்களின் பெயர் சரிபார்க்கப்பட, இவர்கள் அழைக்கப்பட்டார்கள்.
சாமியார் இவர்களை சட்டை செய்யாமல், தாயத்துக்களை தந்தார். சிறிது விபூதியும் குங்குமமும் தந்தார்.
"உங்களோட கொஞ்சம் தனியா பேசணும்", என்றான் ஹரி.  
"சொல்"
"நாங்கள் இருவரும் அந்த காலத்தில்.."
"தெரியும் அதற்கு இப்போது என்ன?"
"நாங்கள் இணைந்து வாழ ஆசைப்படுகிறோம்."
"உங்களின் இணைகளிடம் போய் சொல்லுங்கள்.." அவரின் குரலில் லேசான கடுமை இருந்தது..
"இல்லை.. எங்களின் அந்த கால வாழ்வுக்கு போக விரும்புகிறோம். நீங்கள் காலத்தை வென்றவர் என்று.."
அவன் முடிப்பதற்குள் குறுக்கிட்டார்.
"இது தவறான முடிவு. நிச்சயம் இது உங்களுக்கு தேவையா?", என்றார். வயதுக்கு ஏற்ற எண்ணங்கள் இருக்க வேண்டும்.
"இல்லை .. நாங்கள் எங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டோம்.." என்றாள் மீரா..அவளின் கண்கள் கலங்கி இருந்தது.
"என்னமோ .. சாமியவே நம்ப மாட்டேன்னு சொன்ன. இப்ப கண்ணு கலங்குது.." என சாமியார் சொல்ல..அவளுக்கு அவளின் செய்கை வெட்கமாயிருந்ததுடன்.. நான் சொன்னது இவருக்கு எப்படி .. எண்ணிக்கொண்டாள்.
"சரி உங்கள் விதி ", என்றார்.
இருவரும் அவரை விட்டு விலகி வர.... ஒரு இனம்தெரியாத பரவச..நிலைக்கு இருவரும் செல்வதாக உணர்ந்தார்கள். கோவிலை விட்டு வந்தார்களா? இல்லை.. என்னவானது..
சென்னையின்  பிரெசிடென்சி கல்லூரி. எஃப் எம்  இல் கொலைவெறியுடன் தனுஷ் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது, காலை பத்துமணி பரபரப்பில் - பெல்பாட்டம் தேய அவன் வேகமாக கல்லூரிக்குள் நுழையும்போது அவள் வந்தாள். அவளின் இரட்டை சடை அவளின் பேச்சுக்கு நடனம் ஆட,வலது பக்க ஒத்தை ரோஜா அவனை சிதைத்தது. காவல் காரன் நிறுத்தி ID கார்டு எங்கே என்றான். இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை...ஒரு குழப்ப சூழல் சுழல்!
பிரின்சிபால் கார் அருகில் வந்து நிற்க .."என்ன பிரச்சினை" என்றார்.
"சார்.. கோமாளித்தனமா டிரஸ் பண்ணிக்கிட்டு இந்த ரெண்டு பேரும் கலாட்டா பண்றாங்க சார். என்னமோ பி யு சி படிக்கிறேன்னு சொல்ல்லுதுங்க சார்.. ஐ டி கார்டு கேட்டா.. செல்லாத நாலணாவ தராங்க சார்.."
"ஏய் யார் நீங்க.."
"சார் நாங்க இந்த காலேஜ் .. பிரின்சிபால்.. நீராஜ் "
"வாட்ச்மேன்.. பழைய பிரின்சிபால் ஒருத்தர் பேர சொல்றாங்க. இந்த அம்பது ரூபாய  கொடுத்து.. கீழ்பாக்கத்துக்கு வழி சொல்லி அனுப்பு.. மெண்டல் ஆஸ்பிடலுக்கு.." என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
"இங்க பாருங்கப்பு.. பாத்தா பாவமா இருக்கு. இந்த வயசில இப்படி ஆயிருக்க வேணாம். நீங்க ஒன்னு பண்ணுங்க.. இந்த அம்பது ரூபாய புடிங்க. 24C புடிச்சீங்கன்னா ஆவடி போலாம். அங்க புளியான்கொட்டை சாமியார் ஆசிரமம்னு கேளுங்க.அவர் உங்கள காப்பாத்துவார்..சரியா.." அவர் அடுத்த வேலை யை பார்க்க...
இருவரும்.. யோசிக்க ஆரம்பித்து இருந்தனர்.
*****************************
என்னங்க சாமியார் மறந்து போச்சா.. இங்க பாருங்க.  http://nivedita-thamil.blogspot.com/2010/01/blog-post_7482.html
(contact thamil@gmail.com, if you need help)













 









செவ்வாய், 20 டிசம்பர், 2011

சசி சகி சனி - சோ ஸ்வீட்

சசி சகி சதி சனி - சோ ஸ்வீட்
இது சும்னான்காட்டியுமா இல்ல மெய்யாலுமேவா? இதுதான் ஒவ்வொருவரின் மனதிலும். உடனே தெரிய வழியே இல்லை. சனிப்பெயர்ச்சிக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை எனவும் சொல்லிவிட முடியாது. யாராவது ஜோசியக்காரர் சொல்லியதாலும் இருக்கலாம். இல்லை சோவினாலும் இருக்கலாம். 
முதலில் விகடனில் ஒரு முன்னோட்டம். பின்னர் முழுக்கதை வருகிறது. இதை பார்த்தால் பெங்களுரு கேஸ் ஒரு கட்டத்திற்கு வந்திருப்பது தெரிகிறது. அதிலிருந்து மீண்டு வர ஏதோ திட்டம் என்பதாகவும் தெரிகிறது. 
ஏதோ சகிக்கு தெரியாமல் சசி சதி செய்வதாக சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர். இவங்க ஒரு மாநில முதல் அமைச்சர். அவங்களுக்கு தெரியாம ஒருத்தர் அவங்கள முப்பது சரி விடுங்க இருபது வருஷமா ஏமாத்தராங்கன்னு சொல்றது - கேஷ்வரகுல நே வடியற கதையால்ல இருக்கு. 
தினமலர் விடுற கதை எல்லாம் இதே ரா(ர)கத்துல இருக்கு. ஏதோ ஒரு வாயில வச்சா சப்பக்கூட தெரியாத குழந்தை அந்த சகி மாதிரியும்.. பத்தாங்கிளாஸ் பாஸ் பண்ணாத சசி அந்த குழந்தைய ஏமாத்திட்டு இருந்த மாதிரியும் எழுதறிங்களே - இந்த மக்கள் மேல அவ்வளவு நம்பிக்கையா. இதையெல்லாம் நம்புவாங்கன்னு. 
சில விஷயங்கள் ரொம்ப கவனிக்க வேண்டி இருக்கு.
வினவு எழுதி இருக்க மாதிரி, அவங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற உறவு .. சாதாரண நட்போ இல்ல சகோதர பாசமோ அல்ல. அது வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயம்.
இருவரும் சேர்ந்து நடத்திவரும் அவற்றை ஒரு வாரத்தில் நசுக்கி விட முடியாது.
ஒருபக்கம் நடந்த பெரிய விஷயம் இன்னொரு பக்கத்திற்கு தெரியாது மறைக்கப் பட்டதுதான் பிரச்சினை என்றால்.. அது ஒரு காயம் ஏற்படுத்தி இருக்கும்தான். ஆனால் அது வடுவாக மாற வாய்ப்பில்லை. ஆயிரம் விஷயங்களில் ஒன்றுதானே மறைக்கப் பட்டது. நன்றாக நடந்து கொண்டிருக்கும் மீதி 999 விஷயங்கள்?
இன்னொரு விஷயம். வழக்கம் போல், இந்த வெளியேற்றத்திற்கும்  சகி எந்த காரணமும் சொல்ல வில்லை. சசியும் எந்த விளக்கமும் தரவில்லை. நடராஜனும் வாயை திறக்கவில்லை.அவங்க கட்சி மற்ற கட்சி தலைகள் எதுவும் வாயே திறக்கவில்லை.
இவங்க எல்லோரும் பேசட்டும்.
பெங்களுரு வழக்கு முடிய வேண்டும்.
இன்னும் ஒரு வருடமாவது ஆகட்டும் ... அப்பால பாக்கலாம்.






 




 

புதன், 16 நவம்பர், 2011

ஆறு மாதத்தில் அம்மாவின் சாதனை.

ஆறு மாதத்தில் அம்மாவின் சாதனை.
என்னத்த சொல்றது.அடுத்த தடவ யார் வேணுமின்னாலும் வரலாம் ஆனா - நாம மட்டும் இன்னொரு வாட்டி ஜெயிக்கவே கூடாதுன்னு - கங்கணம் கட்டிக்கிட்டு வேலை பாக்குறாங்க அம்மா.முதல்ல சட்ட சபை வளாகம் பத்தின முடிவை எடுத்ததும் -- சொம்பு தூக்கிகள் கொஞ்சம் கலவரம் ஆனாலும் அது அம்மாவோட தனி திறமை. அவங்க முன்னாடி மாத்த முடிவு எடுத்தப்போ அய்யா ஆளுங்க விடலை இல்லையா அதுக்கு பதிலடிதான். அப்படின்னு கொஞ்சம் தூக்கலாவே சத்தம் போட்டு சரி பண்ணாங்க. 
அம்மான்னா சும்மாவா. அடுத்து பள்ளிக்கூட பசங்கள மூணு மாசம் படிக்க விடாம பம்பரம் விடவச்சி - நிறைய சட்டம் படிச்ச ஜட்சுங்களுக்கு (கே) வேலை கொடுத்தாங்க. நம்ம சொம்பு தூக்கிகள் அசரலையே. கருணாநிதி கவிதைதான் அதுல இருக்கு அதான் அம்மா இப்படி பண்ணாங்கன்னு ஒரே அடி. கடைசியில ஜட்ஜுங்க அம்மா கொடுத்த வேலைய திறமையா செஞ்சி -- ஒரு ஆப்பு தந்தாங்க - நீங்களே இனிமே பத்துக்குங்கன்னு. சொம்புங்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் அத மறந்துட்டு அம்மா ஆடு கொடுக்கறாங்கன்னு மாடு  கொடுக்கறாங்கன்னு அகமகிழ்தாங்க. பத்தகத்த புடுங்கிட்டு பம்பரம் கொடுத்தாலும் குஷிதான் ஆடு மாடு கொடுத்தாலும் குஷிதான். நல்ல மக்களப்பா.
என்ன பண்ணா இந்த சொம்புங்க சும்மா இருக்கும்? அடிச்சாங்க ஒரு அடி.. துப்பாக்கிய தூக்கி.. ஏழு பேர் காலி. மாசத்துக்கு இரண்டு பேர தூக்கறது தனி கணக்கு. சொம்புங்க அப்பாவும் அசரலியே. அது கலவரத்த அம்மா அடக்கற முறை. உடுங்கடான்னிட்டான்களே. 
இந்த குடிசை பகுதியில இருந்து மத்த ஜனங்களோட போய் ஒரு நூலகத்துல புத்தகம் எல்லாம் படிக்கிறார்களாம் - பாத்தாங்க - ஆடு மாடு எல்லாம் கொடுத்தா அத்தையெல்லாம் மேய்க்கறத உட்டுட்டு படிக்கவா போறேன்னு எடுத்தாங்க சாட்டைய. மாத்துறேன் அத்தைய. மறுபடியும் இந்த ஜட்சுங்களுக்குதான் வேலை. சொம்புங்க சும்மாவா? அது ஏன் தெரியுமா? அந்த எடத்துல அம்மா சட்ட சபா கட்டுறதா இருந்தாங்க. அதனாலதான்.. அப்படின்னு.. ஒருபக்கம்.. இன்டர்நெட்டுல இல்லாததான்னு அறிவு கொழுந்துங்க ஒரு பக்கம்னு.. அடி பின்னிட்டாங்க இல்ல.
அடுத்து அம்மா பண்ணதுதான் டாப்பு. இண்டர்நெட்டுல இந்த அளவுக்கு நம்மள தாங்குறாங்களே.. இவங்களுக்கு எதுனா பண்ணனும்னு நினைச்சாங்க பாருங்க. எலிட் பார் ஆரம்பிச்சாங்க... அதான் சூப்பரு. சொம்புங்கள கிண்டல் அடிக்கிற எனக்கு கூட புடிச்சிருக்குப்பா இது. சாரு என்னமா வருவேத்து எழுதி இருக்காரு பாத்தியளா? பின்ன ஏன்னா .. இந்த ஊர்ல ஜானி வாக்கர் சாப்பிட்டு போட்டு அங்க போய் கண்ட கருமத்தையும் குடிச்சா ஒடம்புக்கு ஒத்துக்குதா.. சனியன்.. இனிமே தொல்லை இல்ல. சொம்ப கொஞ்சம் அழுத்தியே அடிக்கலாம்.
இந்த மக்கள் நலப்பணி செய்யறேன்னு ஒரு கும்பலுக்கு வேலை கொடுத்தாராம் அய்யா. அப்படின்னா அவனுங்க அவர் ஆளாத்தான் இருக்கணும். முன்னியே தூக்கின மாதிரி தூக்குன்னு சொல்லிட்டாங்க. அதுக்கும் அசரலியே.. அவனுங்க ஏன்னா வேலை செஞ்சி கிளிச்சானுங்கன்னு அப்படின்னு கேட்டு. அதையும் நியாயம்னு சொல்லிட்டாங்களே. அடுத்து இதே மாதிரி... இன்னும் நிறைய கும்பல் அரசாங்கத்துல இருக்காம்.. சாலைப்பணி.. அப்படி இப்படின்னு. அவங்களுக்கும் ஆப்பு கூடிய சீக்கிரம் இருக்கு. சொம்புங்களா .. இப்பவே காரணம் யோசிச்சு வச்சுக்குங்க. உதவும்.
நாம என்னா பண்ணாலும்  தாங்கரான்களேன்னு புல்லரிச்சு அம்மா அடுத்து பண்ணதுதான் நெறைய சொம்புங்கள யோசிக்க வச்சிருக்கு. ஆடு மாட கொடுத்த புண்ணியவதி பால் வேலைய ஏத்திட்டாங்க. தடையில்லா  மின்சாரம் தாரேன்ன மகராசி - மின் கட்டணத்த  ஏத்திட்டாங்க. பல கட்டனத்துல பஸ் விட்டு மக்களை ஏமாத்தராங்கன்னு சொன்ன புத்திசாலி இப்ப எல்லா கட்டணத்தையும் ஏத்திட்டாங்க.
பஸ் பாஸ் உட்பட. 
 சொம்புங்களா.. உடாதீங்க. இதையும் ஆதரியுங்க. அப்பத்தான் அம்மாவோட நெனப்பு நிறைவேறும்.
 

வியாழன், 21 ஜூலை, 2011

இதுதாண்டா தீர்ப்பு.

இதுதாண்டா தீர்ப்பு.

உச்ச  நீதி மன்றம் அளித்துள்ள வரவேற்க வேண்டிய தீர்ப்பு இது. ஜெ, சோ போன்றோரின்..  தான் நினைத்ததே சரி.. என்ற வர்க்க அகம்பாவத்திற்கு சாட்டை அடி.  
இதில் மிகவும் பாதித்த விஷயங்கள் என்ன தெரியுமா? 
முதலாக குழந்தைகளின் இரண்டு மாத படிப்பினை வீணடித்த பெரிய தவறு. 
சில அறிவாளிகளின் அபத்தமான பேச்சுக்கள்.  ஒருவர் சொல்கிறார்.. கிராமப்புற மாணவர்களால் இதை படிக்க முடியாது என்று.  அத்தனை கேவலமா? இன்று அமெரிக்காவில் ஒரு பெரிய நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருக்கும் எத்தனையோ பேர் கிராமத்தில் படித்தவர்கள்தான். நான் உள்பட. சென்ற முறை இந்தியா வந்தபோது என்னுடன் பயணித்த நியுக்ளியர் விஞ்ஞானி திருவண்ணாமலை பக்கத்தில் ஒரு கிராம பள்ளியில் படித்தவர்தான். முன்பிருந்த மனப்பாடம் செய்யும் பாட திட்டம்தான் கிராம மாணவர்கள் மட்டும் அல்லாது, படித்த பெற்றோரை உடைய நகர மாணவர்களுக்கும் சிரமம். புதிய பாட திட்டம் நிஜமாகவே அருமையாக வடிவமைக்க பட்டிருக்கிறது.முதலில் அவற்றை நான் இணையத்தில் இருந்து தரவிறக்கி பார்த்த பொது அசந்து போய்விட்டேன். அமெரிக்க பாட நூல்களைப்போன்று இருந்தது. ஆசிரியர்களுக்கும் குறிப்புகள். செயல் முறை விளக்கங்கள். இதை அமெரிக்கா வரும்வரை நான் கேள்விப்பட்டது கூட இல்லை. நம் நாட்டில் இப்படி வராதா என் ஒரு ஏக்கம் நிச்சயம் வந்தது.இப்போது அது நிறைவேறி இருக்கிறது.இதை கேவலப்படுத்த இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது? நான் நினைக்கிறேன்.. இப்படி இதற்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்று முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது புது பாடத்திட்டத்தை படிக்காமலே ஜெ சொன்னால் சரி சோ சொன்னால் சரி என் எண்ணுபவர்களாக இருக்க வேண்டும் அல்லது பழைய திட்டத்தில் பயன் அடைபவராக மெட்ரிக் பள்ளி நடத்துபவராக அல்லது அவர்களிடம் பயன் அடைபவராக இருக்க வேண்டும். அல்லது, அவர்களிடம் கையுட்டு பெற்ற அரசியல் வாதியாக இருக்க வேண்டும். அல்லது, வினவு சொல்வதுபோல் வர்ண வெறி பிடித்தவராக இருக்க வேண்டும்.
இதற்கு அடுத்தபடியாக தமிழக அரசு செய்ய வேண்டியது அனைத்து பள்ளிகளுக்கும் கழிப்பறை வசதி முதல், அறிவியல் கூட வசதி வரை தந்து, படிப்பை இலவசமாக்கி ஊக்குவிக்க போட்டிகளும் பரிசுகளும் தரவேண்டும். 
ஏற்கனவே இந்தியாவில் கழிப்பறைகளைவிட செல்போன்கள் அதிகம் என்று ... கிண்டலடிக்கிறார்கள் உலகம் முழுதும். நீங்கள் லேப்டாப் தருவது இருக்கட்டும் அதற்குமுன் சுகாதார வசதியும் செயல்முறை விளக்கத்துக்கு அறிவியல் கூடங்களும் தாருங்கள். ஆசிரியர்கள் தாருங்கள். அவர்களுக்கு நல்ல பயிற்சி தாருங்கள். 
தனியார் பள்ளி முதலைகளிடமிருந்து வாங்கிய கையூட்டையும் திருப்பி தாருங்கள். 


































புதன், 6 ஜூலை, 2011

இந்த தளத்தை பாருங்கள்

இந்த தளத்தை பாருங்கள் -

sarveswaran.serw5.com

MESSAGE FROM MASTERS

Respect


Respect is ugly, love is beautiful

Respect means looking again: re-spect. When you see somebody and you feel like looking again at the person, that’s the meaning of the word “respect”.


I would like you to think about the word respect. It does not mean honor, as it is said in all the dictionaries without exception. Respect simply means looking again, Re-Spect. When you are passing by on the road, somebody looks back again, you have caught his eye - You are somebody. Because respect gives you the idea of being somebody special, you can do anything stupid just to get the attention.

If you are given respect, it is never for you but for something else. For example, if you are a very good man, moral, the respect is for morality, not for you. If you are very rich, you are respected for your house and your car, not for you. You know too, deep down, that if the car disappears and the house is no longer yours, if you are defeated in the elections and are no longer prime minister, all the respect will disappear, because it was never for you in the first place. So you become afraid….


Respect is for something you have, not for you and what you are. Love is simply for you – whether you are rich or poor, capable of certain things or not, talented or not, it is simply for you. At least to one person you are not a stranger. Somebody has given you his or her total friendship and heart; that is fulfilling enough.


Respect is like when you are hungry and you go on reading a book on cooking. Your appetite will not be satisfied, because you need real food. You can have a thousand and one books on cooking, but that is not going to help. Love is food – and respect is a book on cooking. Everybody has been conditioned, taught from the very childhood, to become respectable: to come first in the class, to win the gold medal in the university – to do something so that you become precious.


It has been taught that only by doing something can you become precious – while you simply are! Whether you do something or not is secondary, irrelevant. So if you have become aware of it, drop it immediately. It is a dangerous poison, so don’t allow it to remain in you a single moment. Accept yourself; because whenever you want respect from others, it simply shows that you don’t respect yourself. Otherwise what is the need?




For More visit sarveswaran.serw5.com

வெள்ளி, 1 ஜூலை, 2011

இது என்ன விளையாட்டு?

இது என்ன விளையாட்டு?
தீராத விளையாட்டு பிள்ளை என்று கண்ணனை பாடி கேட்டிருப்பீர்கள். அலகிலா விளையாட்டுடையவன் என ஈசனை பாடி கேட்டிருப்பீர்கள். இது அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் விளையாட்டாக தெரிகிறது. அதாவது இப்போது இந்திய அரசு... காங்கிரஸ் கட்சியின் அரசு விளையாடும் விளையாட்டு. இவங்களுக்கு எதிர்ல விளையாடரவுங்க - நிறைய பேர் இருந்தாலும். ஒரு நாலு டீம்தான் - த்ரில்லிங்கா இருக்கு.
முதலில் திமுகவுடன் நடக்கும் விளையாட்டை பார்ப்போம். 
முதல் ரவுண்டு. 
இது தேர்தல் ஏற்பாடுகளுக்கு முன்னாடியே ஆரம்பித்துவிட்டது. அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த விவாதம் ஆரம்பம் ஆனவுடன் தொடங்கியது. தெரியாமல்தான் கேட்கிறேன்... நடக்கும் ஊழல்களில் பங்கு தராமல் நடக்கும் ஊழல் ஏதாவது இருக்கிறதா? சாதாரணமாக, பதிவாளர் அலுகம், வாகன உரிமம் வழங்கும் துறை... அது என்ன துறை ஆனாலும்.. அங்கு நடைபெறும் அத்தனை வஸூலும், அடிமட்ட பியூநில் இருந்து, அந்த துறை அமைச்சர் வரை அவர்களின் பதவிக்கேற்ப பகிர்ந்து கொள்ளப்படுவது இந்த ஜன நாயக நாட்டில் அனைத்து மன்னர்களும் அறிந்ததுதானே?  இதில் நிதித்  துறையில் இருந்த சிதம்பரம் பங்கும் இருக்கிறது என ஆதாரம் காட்ட சுப்பிரமணிய சாமி வேண்டுமா? இல்லை சோனியாவுக்கும் பங்கு கிடைத்திருக்கிறது அது மக்காவ் வங்கியில் இருக்கிறது என தெரிவிக்கவாவது அவர் வேண்டுமா? நிச்சயம் இந்த பணம் எல்லோராலும் பிரித்து மேயப்பட்டிருக்கிறது. அவ்வளவு ஏன்.. கலைஞரே சொன்னாரே! அத்தனை பணத்தை ஒரு ஆள் லட்ட முடியுமான்னு. சரி பங்கு எல்லாம் போயிருக்குன்னு சொன்னா.. எதுக்கு ஒரு சிலரை மட்டும் உள்ள வைக்கிறாங்க. நெஜமாவே நீதித்துறை, சிபிஐ எல்லாம் அவ்வளவு தீர்மானமா இருக்கா? அதில் எல்லாம் இந்த அழுகின தக்காளிகளின் தாக்கம் இல்லையா? இங்குதான் நமக்கு சிந்தனைக்கு வேலை. நிச்சயமாக நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் குரலும் தருகிறார்கள். அதே நேரம் இந்த அழுகல்களை பாதுகாக்கும் அல்லக்கைகளும் அங்கு இருக்கின்றன.நல்லவர்களிலும் - நமக்கேன் வம்பு - ரகமும் இருக்கும்.
அவைகளுக்கு இடையேயான சட்டரீதியான தற்காப்பு யுத்தம்தான் இங்கு நடப்பது.
அதற்கெல்லாம் மேலும் ஒன்று நடந்திருக்க வேண்டும். அதுவும் கற்பனைக்கெட்டாத விஷயமாக படவில்லை. பங்கு பிரிப்பதில் நியாயமாக நடக்கவில்லை என ஒரு பெரிய சக்தி நினைத்திருக்கிறது. அதை நிருபிக்கவும் வழி இல்லை. அதனால் ஒருவிதமான பழி வாங்கும் செயலாகவும் இதுதோன்றுகிறது. அதை எதிர்த்து கேட்க வேண்டுமானால் - ஒன்று அனைத்தையும் கொடுக்க வேண்டும் அல்லது நான் சரியாக நடந்தேன் எதற்கு என்னை தண்டிக்கிறீர்கள் என நடிக்க வேண்டும். அப்படி நடிப்பதை நம்பிவிட்டால் - கொஞ்சம் தண்டனை - ஆனால் அடித்தது மிஞ்சும். அதுதான் நடப்பதாக தோன்றுகிறது.
இரண்டாவது ரவுண்டு..
இது எலக்ஷன் ஆரம்பித்ததும்...
இந்த டீம் நிச்சயம் எப்படியாவது ஜெயிச்சுடும். அதனால அவங்க கூட இருக்கணும் அதிலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இடம் வாங்கிடனும். அதுக்கு ஏத்த மாதிரி அவங்க பேரெல்லாம் 2G இல மாட்டி இருக்கு. அத சாதகமா உபயோகப் படுத்திக்க வேணும். இப்படியெல்லாம் திட்டம் போட்டு 63 சீட்டு வாங்கிய பின்னர், தலைவரால் நாயன்மார்கள் மாதிரி எல்லாரும் இருங்க... அப்பவும் நக்கல் பாத்தீங்களா!... என சொல்லத்தான் முடிந்தது. அவங்கெல்லாம் நாயன்மாருங்க இவர் சிவபெருமான். 
இதில் இன்னொரு விதமாகவும் இருக்கலாம் என அமுதவன் எழுதி இருந்தார். 
அது..
"தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸூக்கு வேறுமாதிரியான திட்டங்கள் இருந்திருக்கவேண்டும். தமிழகத்தில் திராவிடக்கட்சிகளின் ஆதிக்கம் வேரோடும் வேரடி மண்ணோடும் இல்லாமல் போகவேண்டும் என்பது ராகுலின் திட்டமாக இருக்கலாம். அதற்கு முதலில் திமுகவைக் காலி செய்தாக வேண்டும். அதிமுகவை எப்போது வேண்டுமானாலும் தாங்கள் நினைத்தபடி கபளீகரம் செய்யலாம், அல்லது சுருட்டிப் பாக்கெட்டில் போட்டுக்கொள்ளலாம். ஆனால் திமுக என்பது அப்படியல்ல; அவ்வளவு எளிதில் அந்த இயக்கத்தை சாய்த்துவிட முடியாது. அரசியல் ரீதியாக அவ்வளவு சுலபமான காரியமல்ல அது. அதனால் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொண்டுள்ள திமுகவைப் பதம் பார்க்க இதுதான் சரியான சந்தர்ப்பம் என்பதைத் தீர்மானித்திருக்கலாம். நடந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும்போது இதை நோக்கித்தான் டெல்லியில் இரண்டொரு வருடங்களாகவே காய் நகர்த்திக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது."
அவரின் முழு கட்டுரை படிக்க...
http://amudhavan.blogspot.com/2011/05/blog-post.html 
வேடிக்கை என்னவென்றால்.. அவர்கள் நினைத்தது இரண்டுமே நடக்கவில்லை. ஜெயிக்கவும் இல்லை. திமுகவுக்கு இணையாக சீட்டுக்களை அள்ளவும் முடியவில்லை.
ராகுலுக்கு கிடைத்த ஜோக்கர்கள் அறிவுரை அப்படி.
அடுத்து என்ன நடக்கும்?
இன்னும் கொஞ்ச நாளில் சிபி ஐ - வேகத்தை குறைக்கும். ஹர்ஷத் மேத்தாவை மறந்தது போல் நாமும் இதை மறந்து விடுவோம். தியாகி ராசாவும், கனியும் பெரும் வெற்றி பெற்று.. ஸமூகத்திற்கு மறுபடியும் தொண்டு ஆற்றுவார்கள்.

இரண்டாவது விளையாட்டு.. 
இது சமூக ஆர்வலர்களுடன்... கூடிய விரைவில் விவாதிப்போம்.




























 

செவ்வாய், 21 ஜூன், 2011

சமச்சீர் கல்வி - சமச்சீர் சொதப்பல்

சமச்சீர் கல்வி - சமச்சீர் சொதப்பல் 
தமிழ் நாட்டோட தேசிய குணம் என்று ஒன்று இருக்கிறது. எதை அவர்கள் வாழ்வில் உயர்வாக பேணுவதாக பீற்றிக் கொள்வார்களோ அதை எத்தனை (...னும்) தாழ்வாக கேவலப்படுத்தவும் தயங்க மாட்டார்கள். சைவ வைணவ விரோத மனப்பாங்கு அதிகம் இருந்த அன்றைய நாட்களில் நடந்ததாக எனது தமிழ் ஆசிரியர் சொன்ன கதை - தசாவதாரம் பார்த்த போது ஞாபகம் வந்தது. ஒரு சிவ பக்தர் அவரின் வைணவ நண்பர் வீட்டுக்கு வருகிறார். அப்போது அந்த வைணவரின் சிறு குழந்தை அவர்களின் அருகில் மலம் கழித்துவிடுகிறது.  அவர் மனைவியை அழைக்கிறார். அவரிடம், "அந்த சிவத்தை போட்டு மலத்தை துடை" என்கிறார். சிவம் என்றால் துணி என்ற அர்த்தமும் உண்டாம்.அதற்கு சிவ பக்தர் சொல்கிறார், "வராக மூர்த்தியை அழைத்தால் விருந்து படைத்தால் போல் ஆகுமே" என்று. ஆக ஹரியும் சிவனும் ஒன்று என்றவர்களும் இவர்கள்தான். இருவரையும் கேவலமாக பேசியவர்களும் இவர்கள்தான். 
கற்பு என்றால் துள்ளி குதித்து - அது தமிழர்களின் சொத்து என்பவர்களிடம் கேட்க கூடாத கேள்வி - எதற்கு வம்பு. விட்டு விடுவோம். தொடங்கிய பிரச்சினைக்கு வருவோம்.
"குழந்தையும் தெய்வமும் ... " - அந்த குழந்தைங்க படும் பாடு ஒவ்வொரு முறை நான் தமிழ்நாடு வரும்போதும் எனக்கு கண்ணீர் வரவழைக்கும். நான் ஆனந்தமாக துள்ளித்திரிந்த நாட்கள் மனதில் அழுத்தும். புத்திசாலி குழந்தைகளும், அடித்தட்டு வர்க்க குழந்தைகளும் இதில் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. அல்லது பாதிக்கப்  படுவதே இல்லை. கொல்லப்படுவதெல்லாம்.. நடுத்தர வர்க்க குழந்தைகள்... அதில் பெற்றோர் நினைக்கும் அளவு முக்கிய பங்கு வகிக்கும். அவர்கள் நினைத்த மார்க் இல்லை என்றால்.. அந்த குழந்தை அதோ கதிதான். 
எனது உறவினர் ஒருவர் குழந்தை.. ஒன்பதாம் வகுப்பு. அவனை ஒரு ரூமில் அமரவைத்து, அவன் தாய் அறை வாசலில் படுத்துவிடுவாள். அவன் முகத்தில் சந்தோஷ ரேகை மறைந்தே விட்டது. அவன் இப்போது பத்தாம் வகுப்பில். இப்போது அவன் தாய் என்ன பாடு படுவாள் என நினைக்க.. உம்... ஒரு பக்கம் இனித்தாலும், எத்தனை வேதனை. சரியான பாட திட்டம் இதுவரை இல்லை. ஏதோ ஒன்று.. சொற்ப சொதப்பல்களுடன் வந்ததே என மகிழ்ச்சி அரும்பும் முன்னர்.. கருக்கலைப்பு செய்து விட்டார்கள். கருக்கலைப்புதான் தவறே இல்லையே. ஏன் அது தவறு என்ற எண்ணம்கூட இல்லையே.. இந்த பாழாய் போன நாட்டில்.
இதற்கெல்லாம் காரணம் என்ன என்பது எல்லோருக்கும் பட்டவர்த்தனமாக தெரிகிறது. தனியார் பள்ளிகளின் கொள்ளை கொள்கை எல்லோருக்கும் புரிகிறது. இதை எல்லாம் அலசி ஆராய்ந்து தெருவுக்கு வந்து போராட ஆரம்பித்து இருக்கிறார்கள் மக்கள். ஆனால் அது நிச்சயமாக நசுக்கப்படும் - அதுவும் தெரியும்.
அதனால் இதற்கு உண்மையான - தனியாரும், அரசும் ஏற்றுக்கொள்ளும் தீர்வாக இருக்கக்கூடியது அவள் விகடனில் திரு நடராஜன் கூறியுள்ளது. அமேரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில், நடைமுறையில் இருப்பது.அது கீழே.

'ஆயிஷா’ நடராசன் கூறுகையில்,
''கல்வியே தனியார்மயமாகிவிட்ட சூழலில், 'இதுதான் பொதுவான 'சிலபஸ், இதைப் பின்பற்றுங்கள்' என்று சொல்வதோடு அரசு நிறுத்திக் கொள்வது நல்லது. அதைவிடுத்து, இந்த புத்தகங்களைத்தான் வாங்க வேண்டும் என்று எதற்காகக் கட்டாயப்படுத்த வேண்டும்? 'நேஷனல் கரிகுலம் ஃபிரேம் ஒர்க்’ என்கிற தேசிய கமிட்டி, சமச்சீர் கல்வியை நாடு முழுவதும் பரிந்துரைத்த போது கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மாநில அளவில் அனைத்துப் பள்ளிகளும் பின்பற்றக்கூடிய பொதுவான சிலபஸை உருவாக்கின. அதன்படி தயாராகும் புத்தகங்களை, அரசிடமிருந்தோ.... தனியார் புத்தக நிறுவனங்களிடமிருந்தோ வாங்கிக் கொள்ளலாம் என்றும் அனுமதி அளித்துள்ளன. அதே நடைமுறையை இங்கேயும் பின்பற்றினால் பிரச்னை தீர்ந்துவிடும்'' என்றார் யதார்த்தமாக!
சமச்சீர் கல்வி, வியாபாரம், தமிழ் நாட்டு அரசு, கல்வி






 










திங்கள், 23 மே, 2011

அப்படியா? - கலைஞரோட லேட்டஸ்ட் அறிக்கை படிச்சீங்களா?

அப்படியா?
கலைஞரோட லேட்டஸ்ட் அறிக்கை படிச்சீங்களா?
கனிமொழி அதை விரும்பாவிட்டாலும் கூட, அப்பா சொல்கிறாரே என்று அதற்கு ஒப்புதல் அளித்த ஒரு குற்றத்தைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எந்த ஒரு நிறுவனத்திலும் பங்குதாரர்களாக இருப்பவர்கள் லாபமோ, நட்டமோ அந்த இரண்டில் ஒன்றுக்கு பங்குதாரராக ஆகிவிடுவது பொதுவான விஷயம். ஆனால் அந்த நிர்வாகத்தின் ஒவ்வொருநாள் நடவடிக்கைக்கும் அனைத்து பங்குதாரரும் பொறுப்பாக ஆவதில்லை.

டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கனிமொழிக்காக வாதாடிய வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ஒரு நிறுவனத்தில் நடைபெறுகிற வரவு-செலவு, கொடுக்கல்-வாங்கல், இவற்றில் எல்லாம் அந்த நிர்வாகத்தின் பங்குதாரர்கள் பொறுப்பேற்க வேண்டியவர்கள் என்று விதிமுறை இல்லை என்பதை தெளிவாகச் சுட்டிக் காட்டிய பிறகும் கூட; கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகத்தின் நிர்வாகி தம்பி சரத் குமாரையும், என் மகள் கனிமொழியையும் ஜாமீனில் விட மறுத்து சிறைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

ஆஹா! என்னவொரு அற்புதமான வாதம். லாபம் நட்டம் மட்டும் நிறுவன சொந்தக்காரர்களுக்காம். தினப்படி நிர்வாக வேலைகளுக்கு அவர்கள் பொறுப்பு இல்லையாம். நாலு மாடு வச்சிருந்தா கூட - வேலைக்காரன் சரியா புள்ள போட்டானா தண்ணி காட்டினான்னான்னு - சொந்தக்காரன் பார்ப்பானா இல்லையா? இரண்டு கோடி கொடுத்து சொந்தக்காரனாயிட்டு - இருநூறு கோடி வியாபாரம் ஆகும்போது - நியாயமான சொந்தக்காரன் - ஒண்ணு தப்ப கண்டுபிடிச்சிருக்கணும் - இல்ல பங்கு வாங்கி இருக்கணும்.

இதுல வேடிக்கை என்னன்னா - சட்டம் லஞ்சம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம்னு சொல்லுது - வாங்கின அரசியல் வாதிங்க இடைத்தரகர்கள் - அதில் சிபேர் மட்டும் - பிடிக்கப் படுகிறார்கள். ஆனா .. இதுக்கெல்லாம் சூத்திரதாரியா - வழி நடத்தின - நீரா டாடா அம்பானி வகையறாக்கள்.. எங்கப்பா? அவங்க வந்தா தானே - மத்தவங்களுக்கு எவ்வளவு குடுத்தாங்கன்னு தெரியும்!