Pages

ஞாயிறு, 7 ஜூன், 2015

இன்று பிறந்த தினம். உலகம் பிறந்ததும் இன்றுதான்.(ஜூன் 7 - 4.6 Billion Years ago)

இன்று பிறந்த தினம். - உலகம் பிறந்ததும் இன்றுதான்.(ஜூன் 7 - சும்மா!)
சில நூறு இதயங்கள் வாழ்த்தின. நன்றிகள்.
சென்ற வாரம் டென்னெஸ்ஸி மாகாணத்தின் கிழக்கு பகுதிக்கு மகளை "ETSU"  எனும் மெடிக்கல் university இல் விட சென்றிருந்தோம்.அங்கிருக்கும் அகழ்வாராய்ச்சி நிலையம் பார்த்தோம்.
2000 த்தில், அந்த இடத்தில் சாலைப்பணி நடந்துகொண்டிருந்தபோது,

உங்களுக்கு, தெரியும்.  உலகம் பிறந்து 4.6 billion ஆண்டுகள் ஆகின்றன. முதல் ஒரு செல் உயிர் தோன்ற 800 மில்லியன் வருடங்கள் ஆனது. (ஒரு மில்லியன் - 1,000,000 = 10 லட்சம்) பரிணாமம் எடுத்துக்கொண்ட கால அவகாசம் வியக்க வைக்கிறது. 80 கோடி ஆண்டுகள்.


அதன் பிறகு, தாவரம். அவை வர இன்னும் 34 கோடி ஆண்டுகள் ஆனது. மீன்கள் வந்து 56 கோடி ஆண்டுகள்.முதல் ஊர்வன  வந்து 33 கோடி ஆண்டுகள் ஆகின்றன. பூச்சிகளை எவ்வளவு வெறுக்கிறோம்.  உலகத்தில், அனைத்து மக்களையும் ஒரு தராசின் ஒரு பக்கத்த்தில் வைத்து பூச்சிகளை இன்னொன்றில் வைத்தால் அவை மனிதர்களைப்போல் ஏழு மடங்கு அதிகம். உலகம் அவைகளுடையது.



முதல் பறவை இனம்.



இந்த விலங்குகள் அனைத்தும் பூமியை தங்கள் நிரந்தர உறைவிடமாக கொண்டு வளம் வந்தவை. அவைகளின் வினோத உடல் அமைப்பை பார்த்து வியந்தோம். மிகப்பெரிய டைனோசர். இந்த இடத்தில் கிடைத்தது அல்ல.












இவை இங்கு கிடைத்தவை. அதே வகை. ஆனால் சாக பட்சி.








ஏன்  இங்கு டைனோசர்கள் கிடைக்கவில்லை.





பற்கள்.




எலும்புகள்.


இது ஒரு கரடி.


யானைகளின் மூதாதை.



அப்போதிருந்த கரடிகள்.

மனிதன் எப்படி தோன்றினான்? அவன் முதலில் எப்படி இருந்தான்? இப்படித்தான். குரங்குகளை விட கொஞ்சம் தேவலாம்.


பிறகு?
இப்படி.




அவர்கள் லேப்.


அந்த அப்பலாச்சியன் மலை சூழ் நிலம்.


நுழைவாயில் 




இப்படித்தான் ஆய்ந்தார்கள். படத்தில் என் மக்கள்.

டார்வினின் தத்துவம். பலசாலியான, உயிரினங்கள் தங்கள் இனத்தை தொடர்வாழ வைத்துக் கொள்ளவில்லை, புத்திசாலியான உயிரினங்கள் தங்கள் இனத்தை தொடர்வாழ வைத்துக் கொள்ளவில்லை. சூழ் நிலைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக்கொள்ளும் உயிரினங்கள் மட்டுமே, தங்கள் சந்ததிகளை முன்னோக்கி எடுத்து செல்கின்றன. 


 இவை அனைத்தையும் பார்த்தால், இயற்கை தனது வேலையை செய்துகொண்டிருக்கிறது. அது எந்த உயிரையும், அதன் பிறப்பயும் இறப்பயும், பற்றிய கவலை கொள்வதாக தெரியவில்லை. ஒரு சில பத்தாயிரம் ஆண்டுக்கு முன் வந்த மனிதனை அது பெரிதாக எடுத்துக்கொள்கிறதா என்ன?
பூகம்பங்களும், வெள்ளமும் மழையும் வெய்யிலும் கொன்றுபோடாத மனிதர்களா? . ஆனால் மனிதன்? இவன் வந்ததே சில 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன். இவன் கடவுளை படைக்க எடுத்துக்கொண்டது பல ஆயிரம் ஆண்டுகள். அதையும், உருப்படியாக செய்யவில்லை. மனிதன் படைத்த அவனுக்கு குடியிருப்பு கட்ட சக மனிதனை அழிக்க நினைக்கிறவன்  - எத்துணை அளவு முட்டாள். அத்துணை பெரிய டைனோசரை அழித்த இயற்கை, இவனை மதிக்கும் என்றா நினைக்கிறான்?

எதை மாற்றுவது நம் கையில் இருக்கிறதோ அதை முன்னெடுப்போம். உன்னால் கடவுளுக்கு ஒரு வீடு கட்ட முடியும் என்றால் - அவன் சிரிப்பான்- உன் அறிவீனத்தை நினைத்து. நினைப்பது  உலக நலனுக்காக இருக்கட்டும். நாம் படைக்க முடிவது, மனிதம் மட்டுமே. அது பல்லுயிர் ஓம்பல் மட்டுமே. இயற்கையும் இறைவனும் அவர்கள் வேலையை செய்வார்கள். உன் வேலை சக உயிர்களை நேசி. அது போதும்.
54 ஆண்டுகள் = 0.0000000083 பூமி வயது.