Pages

ஞாயிறு, 21 மார்ச், 2010

ஜித்தன்

ஜித்தன்
-----------
எங்கள் நிறுவனம் கார் கியர்கள் தயாரிக்கிறது. ஜப்பானில் தலைமையகம். இந்தியாவில் இருக்கும் அவர்களின் நான்கு தொழிலகங்களில் எங்களது பெரியது.எங்கள் ஜி. எம் - ராஜ் குமார்.அவனது காரியதரிசி நான். முப்பது வருடங்களாக அவனுக்கு கீழ் வேலை. அவனை விட மூன்று வருடம் மூத்தவன். எங்கள் படிப்பு ஒன்றாக இருந்தாலும் அவன் திறமை எனக்கு வராது.திருட்டு ஜித்தன். சம்பளம் 2 லட்சம் என்றால் அவன் வருமானம் 20 லட்சம் இருக்கும். என்ன செய்ய அவன் உயர உயர - என்னையும் கூட அழைத்து சென்றான். லட்சங்களை விடுங்கள் - நானும்தான் அவனை அண்டி பல லட்சம் பார்த்துவிட்டேன். அவன் திமிர்தான் - சமயத்தில் கத்துவான் பாருங்கள். வேலையை தூக்கி எறிய தோன்றும். சாதக பாதகங்களை பார்த்து பொறுத்துக்கொள்வேன். நான் இல்லாவிட்டால் அவனுக்கு வேலை ஓடாது. அவன் மட்டும் அல்ல அவன் மனைவியும் என்னை படுத்துவாள்.படு பாதகன் என்றாவது மாட்ட வேண்டும் நான் அதை பார்த்து சிரிக்க வேண்டும்.அவன் மகனையும் மகளையும் அமெரிக்காவிலும் லண்டனிலும் படிக்க வைக்கிறான்.ஒன்று சொல்லியாக வேண்டும். உழைப்பு என்பது அவன் உயிராக மூச்சாக இருந்தது.இரவு பத்து மணிக்கு என்னை போனில் அழைத்து அவன் மனைவியை உடனடியாக டாக்டரிடம் அழைத்து போக சொல்லி இருக்கிறான். அவன் அலுவலகத்தில் இருந்துகொண்டு.சில சமயம் நினைத்துக் கொள்வேன். அவன் உழைப்புக்கு தகுந்த ஊதியம் அவனாக எடுத்துக்கொள்கிறான் என்ன தவறு என்று.அந்த நாள் வந்தது. ஜப்பானிய தலைமையகம் எல்லா ஜி.எம்மையும் டோக்கியோவுக்கு அழைத்திருந்தது. விவாதத் தலைப்பு - "பணியில் நேர்மை - work ethics". மாட்டினாண்டா - அந்த ஜில் ஜில் நினைவே இனிமையாக இருந்தது.கலவரத்துடன் என்னிடம் கேட்டான். "நமது ஸ்டாப் யாராவது மொட்டை மெயில் அனுப்பி இருப்பார்களோ?"சாகட்டும் பயத்தில் என்று - பட்டும் படாமலும் பதில் தந்தேன்.இரவு பத்து மணிக்கு சென்னையில் கிளம்பி சிங்கப்பூர் வழியாக டோக்யோ நரிட விமான நிலையம் அடையும் போது அந்த ஊர் நேரம் மாலை 7 மணி. சுஷி தெரியாகி சிக்கன் ஜானி வாக்கர் - முடித்து 11 மணிக்கு படுக்கையில் விழுந்தேன். இரவு இரண்டு மணிக்கு அடுத்த அறையில் இருந்து போன். இந்த ஒரு வருடத்தில் இறக்குமதி தீர்வை எஞ்சின் வால்வுகளுக்கு எந்தனை சதம் உயர்ந்திருக்கிறது என்று.இவன் மனிதனா இல்லை ஜப்பான் காரனின் ரோபோவா?அடுத்த நாள் உலகின் அனைத்து பகுதி அதிகாரிகளும் பிரசண்டேஷன் கொடுத்தார்கள். ராஜ் மட்டும்தான் அனைவர் கைத்தட்டலையும் பெற்றான். Checks and Balances - தகவறிதலும் சமன்படுத்தலும் - என்று ஆரம்பித்தான். இப்போது இருக்கும் ஆடிட்டிங் சரியில்லை என்றான். அது இறந்தபின் நடத்தும் அறுவை என்றான். ஒவ்வொரு கிளையிலும் ஒரு செயல்திறன் பார்வையாளர் இருக்க வேண்டும் அவர் நேரடியாக தலைமை நிலையத்திற்கு மட்டும் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். இது நேர்மையை நிர்வகிக்கும் என்றான். எல்லோருக்கும் இது பிடிக்கவில்லை - ஆனால் தலை - யோஷிமோ - பரவசம் அடைந்து சரி என்று பாராட்டியதால் - அனைவரும் கை தூக்கினர். என்னடா இது எவனாவது செஞ்சிக்குவானா தனக்கே ஆப்பு - என்று எண்ணிக்கொண்டேன். இந்தியா வந்த ஆறாவது நாள் - இன்டர்வியு செய்தது 10 சார்டட் அக்கௌடன்ட். எல்லோருக்கும் எண்கள் தந்து எழுத்து தேர்வு நடத்தினான். அதே எண்களுடன் நேர்முக தேர்வும். ரங்கராஜன் எல்லாவற்றிலும் முதலாக இருந்தான். வினோத் எல்லாவற்றிலும் கடை. அவர்களின் எண்கள் 4 மற்றும் 8 . வினோத்தின் கண்களில் ராத்திரி குடித்த வோட்கா மிச்சம் இருந்தது. அவன் தந்தைக்கு ஜானி வாக்கர்தான் பிடிக்கும். எத்தனை தடவை எங்களோடு வந்திருப்பார்.அன்று வீடு திரும்பும்போது அவன் காரில் வரச்சொன்னான். அவன் புகழ் பாடுவது பழகிப்போச்சுதானே. பாடினேன். நாலையும் எட்டையும் மாற்றிவிடு என்றான். நான் செய்யாததா - சரி என்று ..... இருங்கள் ... சரி சரி .... அங்கு நல்ல வேடம். அதற்கு பரிகாரம் ஒரு தலையாட்டி ஆடிட்டர். இவன் ஜித்தனா இல்லையா. அவன் வீட்டிற்கு சென்றபின் - நீது அவன் மனைவி - விருந்தோடு காத்திருந்தாள். எங்களின் நட்புக்கு பாராட்டு என்றாள். விருந்து முடிந்தபோது - நீது மட்டும் சிறிது நிதானமாக இருந்தாள்.நான் வீட்டுக்கு போயே ஆகா வேண்டும் என்றேன். நீது கார் ஓட்டினாள். ராஜ் அவன் திறமையை அவனே புகழ்ந்து கொண்டிருந்தான். நான் அவன் அறியாது நீதுவை தீண்டிய நேரம் - அந்த விபத்து. சம்பவ இடம் அம்பு குறியிட்டு தின இதழ்களில் வந்த நேரம் நாங்கள் சொர்க்க/நரக வாசலில்.இருங்கள் கதை முடியவில்லை. மூவரும் ஒருசேர வந்ததால் - ஒரே நேரத்தில் விசாரணை. "ராஜ் நீங்கள் தவறு எதையும் செய்யவில்லை. நிறைய வேலை வாய்ப்பை உருவாக்கினீர்கள். உங்கள் மனைவியின் இன்பத்தில் குறுக்கிடவில்லை. மேல் அதிகாரிகளுக்கு உண்மையாய் இல்லை. அது மட்டும் தவறு. அதனால் ஒரு வருட நரகத்திற்கு பின்னர் சுவர்க்கம் செல்லலாம்."அடுத்து நான் - " நேராக நரகம்" -எதிர் பாராததா?அடுத்து நீது - "நீங்கள் ராஜை மணம் மட்டும் செய்தீர்கள் - பின்னர் உங்களின் இரு குழைத்தகளுக்கும் தந்தை இந்த நரன். அதனால் அவனோடு நீங்களும் செல்லுங்கள்." நீது சிரித்தாள். இவன் கொடுத்த தண்டனை வலிக்க வில்லை - நீதுவுடன் எங்கு வேண்டுமானுலும் செல்லலாம்.
ஆனால் - ஒரு கதை முழுக்க நானும் - 30 வருடங்களாக நாங்களும் காத்துவந்த ரகசியத்தை போட்டு உடைத்து விட்டானே - பாவி.
ராஜ் குமாருக்கு சொர்க்கம் சொர்கமாக இருக்குமா?

1 கருத்து: