Pages

திங்கள், 2 ஏப்ரல், 2012

நாங்க அன்னிக்கே சொன்னோமில்ல!

நாங்க அன்னிக்கே சொன்னோமில்ல சகோ!


இப்ப எல்லோரும் என்னாப்பா சொல்றிங்க? உண்மையாத்தான்னு சொன்னீங்களே. நம்பி பட்டாசெல்லாம் வெடிச்சோமேன்னு புலம்பரவங்கள பாத்தா பாவமா இருக்கு. ரொம்ப கொடும - தினமலருக்குத்தான். என்னா பாராட்டுப்பா அம்மாவுக்கு. என்னமோ சசிதான் எல்லாத்தையும் பண்ணமாதிரி. இன்னிக்கி சலம்பலே இல்ல. 
அம்மாகிட்ட வாங்கின ஆப்புன்னா.. சும்மாவா? இது பிரிக்க முடியாத சொந்தம்னு.. அன்னிக்கே சொன்னமே.
http://nivedita-thamil.blogspot.com/2011/12/blog-post.html
சகோதர/சகோதரிகளே இது மறுபடியும் நடக்காதுன்னு மட்டும் நினைக்காதிங்க. ஆனா மறுபடி நடந்தாலும்.. நம்ம தினமலர்.. இப்ப எழுதின மாதிரியேதான் எழுதும்.
இப்ப எந்த போலிஸ் காரனுக்காவது.. கைது பண்ணி வச்சிருக்க சொந்தங்கள தெகிரியமா விசாரிக்க தெம்பு இருக்குன்றீங்க.நிச்சயமா இருக்காது.
அப்போ இதெல்லாம் எதுக்குன்னு கேக்கறீங்களா? திருட்டுன்னாலும் அதுல ஒரு நேர்மை இருக்கணும் இல்லியா? சரியா பங்கு பணத்த அனுப்பலன்னா? இப்ப பாத்தீங்களா? போட்டு (உள்ள) வாங்கிடுவாங்களா இல்லியா? 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக