Pages

திங்கள், 7 ஜூன், 2010

இந்தியன் உயிர் இந்தியனால் மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியன் உயிர் இந்தியனால் மதிப்பிடப்பட்டிருக்கிறது.
--------------------------------------------------------------------------
1984 இல் நீங்கள் இந்த சோகத்தை பார்த்திருந்தால் இதன் பாதிப்பு முழுமையாக தெரியும். இருபதாயிரம் பேருக்கு மேல் அப்படியே மாண்டார்கள். தெருவெங்கும் மரண ஓலம். அது ஒரு கோர சம்பவம். புது தில்லியில் ஒரு இன்டர்வியுவிற்கு சென்று திரும்பியிருந்தேன். போபாலை தாண்டி எனது ரயில் சென்னையை நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அந்த செய்தி. யுனியன் கார்பைட் ஆலையின் விஷ வாயு போபாலை நாசம் செய்து இருந்தது.
இப்போது அமெரிக்காவில் இது போன்ற ஒரு சோகம். BP யின் கடல் சார் ஆழ் துளை கிணற்றில் - ஒரு விபத்து. பதினோரு உயிர்கள் பலி. இன்னும் எண்ணை கடலில் கலந்துகொண்டிருக்கிறது. பல கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. பல மீனவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒபாமா மூன்று முறை பார்வை இட்டார்.
BP யின் இதுவரையான செலவு மட்டும் 1.5 பில்லியன் டாலர்கள். 7000 கோடி ரூபாய்.
அதாவது 11 உயிர் மற்றும் 200000 பேர் வாழ்க்கை பகுதியாக பாதிப்பட்டதிற்கு மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்பிற்கும் சேர்த்து.
ஆனால் - 20000 (இது அரசு கணக்கு இறந்தவர்கள் லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்பது அப்போது நான் தினசரிகளில் படித்தது) - உயிர் மற்றும் லட்சத்திற்கும் மேல் பாதிப்படைந்ததற்கு - இரண்டு வருட சிறை - 25000 ரூபாய் - 500 டாலர் பெறுமான ஜாமீன். ரத்தம் கொதிக்கிறது.
அயோக்கியர்களின் அரசு இயந்திரம் - கொஞ்சமும் நியாய சிந்தனை இல்லாத காட்டு மிராண்டிகள் சுரண்டிக்கொண்டிருக்கும் - இந்தியா. சத்தமாக குரல் கொடுப்போம். ஊதும் சங்கை ஊதுவோம் - விடியும்போது விடியட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக